என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகளுக்கு குழந்தை பிறந்தது
Byமாலை மலர்19 Aug 2019 6:38 PM GMT (Updated: 19 Aug 2019 6:38 PM GMT)
அமெரிக்காவில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்து கர்ப்பமான நர்சுகள் 9 பேருக்கும் குழந்தை பிறந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் நகரில் ‘மைன் மெடிக்கல் சென்டர்’ என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு வேலை பார்த்து வரும் நர்சுகள் 9 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பமாயினர்.
இதையடுத்து கர்ப்பிணி நர்சுகள் 9 பேரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு “எங்கள் மருத்துவ மையத்தின் 9 நர்சுகள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை ஏப்ரல் மற்றும் ஜூலையில் எதிர்பார்த்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தது.
இந்த புகைப்படம் அப்போது சமூக வலைத்தளத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. சமூக வலைத்தள ஆர்வலர்கள் நர்சுகளுக்கு வாழ்த்துக்கூறி அந்த புகைப்படத்தை பகிர்ந்தனர்.
இந்த நிலையில் அந்த நர்சுகள் 9 பேருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. நர்சுகள் 9 பேரும் தங்களது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைராலாகி வரும் அந்த புகைப்படம் அதிக ‘லைக்’குகளை குவித்து வருகிறது.
அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் நகரில் ‘மைன் மெடிக்கல் சென்டர்’ என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு வேலை பார்த்து வரும் நர்சுகள் 9 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பமாயினர்.
இந்த புகைப்படம் அப்போது சமூக வலைத்தளத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. சமூக வலைத்தள ஆர்வலர்கள் நர்சுகளுக்கு வாழ்த்துக்கூறி அந்த புகைப்படத்தை பகிர்ந்தனர்.
சமூக வலைத்தளங்களில் வைராலாகி வரும் அந்த புகைப்படம் அதிக ‘லைக்’குகளை குவித்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X