என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐரோப்பிய ஆணைய தலைவர் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க மாட்டார்
Byமாலை மலர்19 Aug 2019 12:10 PM GMT (Updated: 19 Aug 2019 12:10 PM GMT)
ஆகஸ்ட் 24-26 தேதிகளில் நடைபெற உள்ள ஜி-7 மாநாட்டில் ஐரோப்பிய ஆணைய தலைவர் ஜீன் க்ளாட் ஜங்கெர் கலந்து கொள்ளமாட்டார் என ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.
மாஸ்கோ:
45வது ஜி-7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஸ் நகரில் ஆகஸ்ட் 24-26 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், இம்மாநாட்டில் ஐரோப்பிய ஆணைய தலைவர் ஜீன் க்ளாட் ஜங்கெர் கலந்து கொள்ளமாட்டார் என ஐரோப்பிய ஆணைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ‘‘இம்மாத தொடக்கத்தில் ஜங்கெர் அவர்களுக்கு பித்தப்பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர் நீண்ட தூர பயணம் செய்யக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர், எனவே அவரால் ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இயாலாது. தற்போது அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X