search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்புப்பணிகளில் ஈடுபடும் வீரர்கள்
    X
    மீட்புப்பணிகளில் ஈடுபடும் வீரர்கள்

    சீனாவில் கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி

    சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தின் கிழக்குப் பகுதி அருகே கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலியாகினர். மேலும் இருவரை காணவில்லை.
    ஜினான்:

    சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் இருந்த வந்த கப்பல் ஒன்று, இயற்கை சீற்றம் காரணமாக நேற்று மாலை 6 மணியளவில் ரிசாவோ நகர துறைமுகம் அருகே கடலில் மூழ்கியது. தகவல் அறிந்து மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  

    இது குறித்து மீட்புப்படை அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘இவ்விபத்தில் 7 பேர் பலியாகினர். மேலும் இருவரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது, இந்த விபத்து நிகழ்ந்த போது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் காற்று வீசியது’, என தெரிவித்தனர்.
    Next Story
    ×