என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா
Byமாலை மலர்16 Aug 2019 6:13 PM GMT (Updated: 16 Aug 2019 6:13 PM GMT)
காஷ்மீர் குறித்து ஐ.நா. சபையில் விவாதிக்க வேண்டுமேன பாகிஸ்தான் மற்றும் சீனாவால் விடுக்கப்பட்ட கோரிக்கை தோல்வியடைந்தது.
நியூயார்க்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்தது. காஷ்மீர் சர்வதேச அளவில் பிரச்சனைக்குறிய இடம் என்றும் இந்திய அரசு அதற்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சர்வதேச சட்டத்துக்கு புறம்பானது என தெரிவித்தது.
இதையடுத்து, இந்தியா காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்ததை எதிர்த்து பாகிஸ்தான் ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியது. மேலும், இது தொடர்பாக ஆலோசிக்கப்படவேண்டும் என கோரிக்கை வைத்தது.
இந்நிலையில், காஷ்மீர் தொடர்பான விவாதத்தை மேற்கொள்வது குறித்து ஐ.நா. சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் காஷ்மீர் குறித்து விவாதம் வேண்டும் என பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா வாக்களித்தது. ஆனால், ரஷியா போன்ற நாடுகள் காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம் எனவும் இதை ஐ.நா. சபையில் விவாதிக்க அவசியமில்லை என வாக்களித்தது.
இறுதியில், இந்தியாவுக்கு அதிகமான நாடுகள் ஆதரவு அளித்தால் ஐ.நா. சபையில் காஷ்மீர் விவாதத்தை எழுப்ப முயற்சித்த பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சிகள் தோல்வியடைந்தன.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஐ.நா.வுக்கான இந்திய பிரநிதி சையது அக்பருதீன் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அங்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு ரத்து செய்தது முற்றிலும் இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டது. மேலும், அது முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரம். ஆகையால் பிற நாடுகள் இந்த விவகாரத்தில் தலையீட எந்தவித உரிமையும் கிடையாது.
மேலும், ஜம்மு-காஷ்மீரில் வாழும் மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்காகவும், சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காவே சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கான அத்தனை முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X