search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக உள்ள பயணிகள்
    X
    ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக உள்ள பயணிகள்

    போராட்டம் தணிந்தது- ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கம்

    ஹாங்காங் விமான நிலைய வளாகத்தில் நடைபெற்று வந்த போராட்டம் சற்று தணிந்த நிலையில், விமான சேவை தொடங்கி உள்ளது.
    ஹாங்காங்:

    ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கடந்த 10 வாரங்களாக போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் விக்டோரியா பூங்காவில் அமைதி பேரணி நடத்தினர். ஆனால் ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாரின் தடையை மீறி அங்கிருந்து வெளியேறி முக்கிய சாலைக்கு சென்றனர்.  இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 

    இதேபோல் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தை முற்றுகையிட்டும் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. போராட்டக்காரர்களுக்கும் கலவர தடுப்பு  பிரிவு போலீசாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. 

    ஹாங்காங் விமான நிலையம்

    ஆனால், இன்று அதிகாலையில் பெரும்பாலான போராட்டக்காரர்கள் விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் விமான சேவை மீண்டும் தொடங்கியது. வழக்கமான விமானங்கள் அனைத்தும் எந்த தடங்கலும் இன்றி புறப்பட்டுச் சென்றன. இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது. 

    சில போராட்டக்காரர்கள் மட்டும் விமான நிலையத்தினுள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் விமான சேவையை தடுக்காத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
    Next Story
    ×