search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்புக்கு எதிராக கையெழுத்திடும் வெனிசுலா மக்கள்
    X
    டிரம்புக்கு எதிராக கையெழுத்திடும் வெனிசுலா மக்கள்

    டிரம்புக்கு எதிராக வெனிசுலாவில் நாடு தழுவிய கையெழுத்து இயக்கம்

    அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளைக் கண்டித்து வெனிசுலாவில் டிரம்புக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.
    கராகஸ்:

    வெனிசுலாவில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக காய்நகர்த்திய எதிர்க்கட்சி தலைவர் குவைடோ, தன்னை நாட்டின் இடைக்கால அதிபராக பிரகடனம் செய்தார். பாராளுமன்றம் எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிபர் தேர்தலில் நிகோலஸ் வெற்றி பெற்றது செல்லாது என்றும், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் குவைடோ வலியுறுத்தி வருகிறார்.
     
    குவைடோவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து, அவரை இடைக்கால அதிபராக அங்கீகரித்துள்ளது. இதனால், கடும் அதிருப்தி அடைந்த அதிபர் மதுரோ, அமெரிக்காவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக வெனிசுலாவுக்கு அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சமீபத்தில் இந்த தடைகளை மேலும் அதிகரித்தது. அமெரிக்காவில் உள்ள வெனிசுலா அரசு சொத்துக்கள் அனைத்தையும் முடக்குவதற்கான உத்தரவில் கடந்த 5-ம் தேதி அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். 

    இதனால் டிரம்புக்கு எதிராக வெனிசுலாவில் ஆளும் ஐக்கிய சோசலிச கட்சி சார்பில் மெகா கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி கையெழுத்துக்களுடன் ‘டிரம்ப் வேண்டாம்’ என்ற பெயரில் நாட்டின் முக்கிய நகரங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கையெழுத்திட்டு, டிரம்புக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

    கராகஸ் நகரில் இந்த கையெழுத்து இயக்கத்தில் இணைந்து கையெழுத்திட்ட ஒருவர் இதுபற்றி கூறுகையில், “அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையானது அதிபரை மட்டுமல்லாது நாட்டு மக்கள் அனைவரையும் கடுமையாக பாதித்துள்ளது. நாட்டின் நலன் கருதியே இதில் கையெழுத்திட்டேன்’ என்றார்.

    மொத்தம் 13 மில்லியன் கையெழுத்துக்கள் இடப்பட்ட மனுக்களை ஒன்றிணைத்து, அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74-வது அமர்வில் சமர்ப்பிக்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×