search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளம் சூழ்ந்த கராச்சி நகரம்
    X
    வெள்ளம் சூழ்ந்த கராச்சி நகரம்

    பாகிஸ்தானில் கனமழைக்கு 28 பேர் பலி

    பாகிஸ்தான் நாட்டின் சில மாகாணங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சார்ந்த விபத்துகளில் சிக்கி 28 பேர் உயிரிழந்தனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் கைபர்துங்கவா மாகாணம், கராச்சி, லாகூர் உள்ளிட்டபகுதிகளில் வழக்கத்தைவிட மிக அதிகமான மழை பெய்து வருகிறது.

    கராச்சி சாலை

    குறிப்பாக, கராச்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 150 மில்லிமீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சார்ந்த விபத்துகளில் சிக்கி இன்றுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த மாதம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குட்பட்ட நீலம் சமவெளி பகுதியில் பெய்த பெருமழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 28 பேர் பலியானது நினைவிருக்கலாம்.

    Next Story
    ×