search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி-லாகூர் பேருந்து சேவை
    X
    டெல்லி-லாகூர் பேருந்து சேவை

    டெல்லி-லாகூர் பேருந்து சர்வீசையும் ரத்து செய்தது பாகிஸ்தான்

    காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான், டெல்லி-லாகூர் இடையிலான பேருந்து சேவையையும் ரத்து செய்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை இந்தியா ரத்து செய்துள்ளது. அத்துடன் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் கடும் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் அரசு பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    டெல்லியில் இருந்து லாகூர் செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயிலை பாகிஸ்தான் பகுதிக்குள் அனுமதிக்க மறுத்து நிறுத்தியது. இதேபோல் ஜோத்பூர்-கராச்சி இடையேயான தார் எக்ஸ்பிரஸ் ரெயிலையும் அனுமதிக்காமல் ரத்து செய்தது.

    டெல்லி-லாகூர் பேருந்து

    இந்நிலையில், லாகூர்-டெல்லி இடையே நட்புரீதியில் இயக்கப்படும் பேருந்து சேவையையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. இத்தகவலை பாகிஸ்தானின் தகவல் தொடர்பு மந்திரி முராத் சயீத் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு கமிட்டி எடுத்த முடிவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

    இந்த பேருந்து சேவையானது 1999ல் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்தியாவில் 2001ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு பேருந்துசேவை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர், 2003ல் மீண்டும் பேருந்து சேவை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×