search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஷ்ய தூதரகம் இரங்கல்
    X
    அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஷ்ய தூதரகம் இரங்கல்

    அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஷ்ய தூதரகம் இரங்கல்

    அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள ரஷ்ய நாட்டு தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முக்கிய நகரங்களான டெக்சாஸ் , ஒஹியோ மற்றும் சிகாகோ நகரங்களில் நடந்த துப்பாக்கிச் சூடுகளினால் அப்பகுதிகள் சற்று நிலைகுலைந்துள்ளன.

    கடந்த சனிக்கிழமையன்று டெக்சாஸ் மாகாணத்தின் எல் பசோ நகரத்தில் உள்ள வால்மார்ட் சீலோ விஸ்டா மாலில் நுழைந்த மர்மநபர் அங்கிருந்தவர்களை தனது துப்பக்கியால் சரமரியாக சுட்டுள்ளார். இதில் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 26-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இச்சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்தில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளப்பில் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.  

    மீண்டும் ஞாயிறன்று சிகாகோ நகரின் டக்ளஸ் பூங்காவிற்கு காரில் வந்த ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளார். இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தொடர் தாக்குதல் சம்பவங்களினால் அப்பகுதியில் உள்ளவர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×