என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவர 7 நாட்கள் போதும்: டிரம்ப்
Byமாலை மலர்3 Aug 2019 11:05 AM GMT (Updated: 3 Aug 2019 2:51 PM GMT)
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்கு கொண்டுவர 7 நாட்கள் மட்டும் போதும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
காபூல்:
மேலும், தலிபான் அமைப்புகளுடன் பல கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில் நல்ல முன்னேற்றமும் நிலவுகிறது. பேச்சுவார்த்தையின் மூலமே பயங்கரவாதத்தினை ஒழிக்கமுடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத இயக்கத்திற்கும், பாதுகாப்புப்படைக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசை எதிர்த்து போட்டி அரசு நடத்தும் தலிபான் இயக்கம், நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
பயங்கரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் உள்நாட்டு பாதுகாப்பு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த சண்டையில் பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் போரை நான் நினைத்தால் 7 நாட்களில் முடிவுக்கு கொண்டுவந்து விடுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின்போது டிரம்ப் கூறியதாவது:-
நான் நினைத்தால் ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை 7 நாட்களில் முடிவுக்கு கொண்டுவந்துவிடுவேன். ஒருவேளை நான் அவ்வாறு செய்தால் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழப்பார்கள். அதில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்களாகவே இருப்பார்கள். ஆனால் நான் பொதுமக்கள் உயிரிழப்பதை விரும்பவில்லை.
மேலும், தலிபான் அமைப்புகளுடன் பல கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில் நல்ல முன்னேற்றமும் நிலவுகிறது. பேச்சுவார்த்தையின் மூலமே பயங்கரவாதத்தினை ஒழிக்கமுடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X