என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடியும் இம்ரான்கானும் விரும்பினால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட தயார் - அதிபர் டிரம்ப்
Byமாலை மலர்2 Aug 2019 3:36 AM GMT (Updated: 2 Aug 2019 3:36 AM GMT)
இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோர் விரும்பினால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் அதிபட் டிரம்பை சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி என்னை கேட்டுக்கொண்டார் என கூறினார்.
டிரம்பின் இந்த கருத்து இந்தியாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிபர் டிரம்பின் கருத்தை திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாஷிங்டன்னில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காஷ்மீர் பிரச்சனை இந்தியா- பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக உள்ளது. இந்த பிரச்சனையை தீர்த்துக்கொள்வது இந்தியா- பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சார்ந்தது. இதில் மத்தியஸ்தம் செய்வதை ஏற்றுக்கொள்வது என்பது மோடியிடம் தான் உள்ளது. மோடியும், இம்ரான் கானும் மிகச் சிறந்த தலைவர்கள். இரு நாட்டு தலைவர்களும் விரும்பினால் காஷ்மீர் பிரச்சனையில் உதவ தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X