search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எக்டரினா கரெக்டொலவா
    X
    எக்டரினா கரெக்டொலவா

    ‘இன்ஸ்டா புகழ்’ இளம்பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்த காதலன்

    இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்ற இளம்பெண்ணை, அவரது காதலனே கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அடைத்து வைத்த சம்பவம் ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது.
    மாஸ்கோ:

    ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் எக்டரினா கரெக்டொலவா. இந்த இளம்பெண் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் மிகவும் புகழ்பெற்றவர் ஆவார்.  90 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.

    இவர் வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றார். ஆனால், சில நாட்களாக எக்டரினா காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    போலீசார், மாஸ்கோவில் எக்டரினா தங்கியிருந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அதிர்ச்சியாக, எக்டரினாவின் உடல் சூட்கேஸ் ஒன்றில் இருந்துள்ளதை கண்டறிந்தனர்.

    எக்டரினா கரெக்டொலவா

    இது குறித்து போலீசார் கூறுகையில், ‘எக்டரினா தங்கி இருந்த குடியிருப்பு பகுதியில் இருந்த சிசிடிவி காட்சி மூலம் இதற்கான காரணம் யார்? என்பதை கண்டறிந்தோம். இதில் சம்பவ தினத்தன்று எக்டரினோவின் முன்னாள் காதலர் சூட்கேசுடன் செல்லும் காட்சி இடம் பெற்றிருந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்தோம். பின்னர் விசாரணையில், எக்டரினோ அவரது புதிய காதலருடன் பிறந்தநாள் கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார். இதையடுத்து அவரை கொன்று சூட்கேசில் அடைத்து வைத்துள்ளார். எக்டரினா உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளன’ என கூறியுள்ளனர்.

    Next Story
    ×