search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கிச்சூடு நடந்த பகுதி
    X
    துப்பாக்கிச்சூடு நடந்த பகுதி

    பிரான்சில் துப்பாக்கிச்சூடு- 3 பேர் பலி

    பிரான்ஸ் நாட்டில் மர்மநபர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் ஒல்லியுஎஸ் என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரில் உள்ள வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது.

    இந்நிலையில், அந்த பேட்ரோல் பங்கிற்கு நேற்றிரவு வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் தாங்கள் மறைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதை சற்றும் எதிர்பாராத அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஒடினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். 
    துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் காவல் துறையினர்.
    இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவரை மீட்டு சிக்கிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தப்பிச்சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    Next Story
    ×