என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் உணவு திருவிழா கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி
Byமாலை மலர்29 July 2019 4:57 AM GMT (Updated: 29 July 2019 4:57 AM GMT)
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற உணவு திருவிழா கூட்டத்தில் ஒருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
நியூயார்க்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற உணவு திருவிழா கூட்டத்தில் ஒருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கு பகுதியில் சான் ஜோஸ் நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கில்ராய் நகரில் ஆண்டுதோறும் ‘பூண்டு பிரியர்கள்’ நடத்தும் உணவு திருவிழா அந்நாட்டின் மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற உணவு திருவிழா கூட்டத்தில் ஒருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கு பகுதியில் சான் ஜோஸ் நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கில்ராய் நகரில் ஆண்டுதோறும் ‘பூண்டு பிரியர்கள்’ நடத்தும் உணவு திருவிழா அந்நாட்டின் மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டின் மூன்றுநாள் திருவிழாவின் இறுதிநாளான நேற்று அங்கு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.
அப்போது திருவிழா கூட்டத்தில் ஒருவர் திடீரென்று கண்மூடித்தனமாக மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் உயிர் பயத்தில் சிதறி ஓடினர்.
இந்த எதிர்பாராத தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். காயங்களுடன் 12 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X