search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை தாக்குதலின் போது பற்றி எரிந்த ஓட்டல்
    X
    மும்பை தாக்குதலின் போது பற்றி எரிந்த ஓட்டல்

    பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி: ஹபீஸ் சயீதின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

    பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்ட ஹபீஸ் சயீதின் நீதிமன்ற காவல் மேலும் 14 நீட்டிக்கப்பட்டுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பயங்கரவாதி ஹபீஸ் சயீத். இவர் பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். 

    அமெரிக்காவின் தொடர் அழுத்தத்துக்கு அடிபணிந்த பாகிஸ்தான் அரசு, பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக ஹபீஸ் சயீத் மற்றும் அவரது அமைப்பை சேர்ந்த மேலும் 12 பேரை கடந்த 17-ம் தேதி கைது செய்தது.

    இதையடுத்து, அன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஹபீஸ் சயீத் உள்ளிட்டவர்களை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க பஞ்சாப் மாநில பயங்கரவாத தடுப்பு நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கினார்.
    ஹபீஸ் சயீத்
    நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் ஹபீஸ் சயீத் மற்றும் அவருடன் கைதானவர்கள் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    பயங்கரவாதி ஹபீஸ் சையத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேரின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தவிட்டார். மேலும், ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் ஹபீஸ் சயீத் மீதான முழுமையான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
    Next Story
    ×