என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்த அரிய வகை உயிரினத்தை பாதுகாக்க பிரபல சுற்றுலா தலத்தை மூடும் இந்தோனேஷியா
Byமாலை மலர்24 July 2019 7:10 AM GMT (Updated: 24 July 2019 7:21 AM GMT)
இந்தோனேஷியாவில் அரிய வகை உயிரினத்தை பாதுகாக்க, சுற்றுலா தலமாக இயங்கி வரும் பூங்காவையே அந்நாடு மூட உள்ளது.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் சுந்தா எனும் சிறு தீவுகளில் அமைந்துள்ளது கொமோடோ தேசிய பூங்கா. கொமோடோ, படார், ரின்கா ஆகிய பெரிய தீவுகளும், 26 சிறு தீவுகளும் இப்பூங்காவில் அடங்கியுள்ளன.
இதன் மொத்த பரப்பு 1,733 சதுர கிமீ ஆகும். இந்த பூங்கா தொடக்கத்தில், கொமோடா டிராகன் எனும் அரிய பல்லி வகையை பாதுகாக்க கடந்த 1980ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த பூங்காவில் வாழும் அரிய வகை கொமோடா டிராகன்களை பாதுகாக்க கொமோடோ தேசிய பூங்காவை அடுத்த ஆண்டு இந்தோனேஷியா மூட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அழிவின் விளிம்பில் இருக்கும் கொமோடோக்களை காக்க நாங்கள் நிச்சயம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் ஆக வேண்டும்.
பெரும்பாலான சுற்றுலா பயணிகள், இந்த டிராகன்களின் வாழ்வியல் முறை குறித்து அறியவே வருகை தருகின்றனர். எனவே, ஒரு வருடத்திற்கு பிறகு திறக்கலாம் என முடிவெடுத்துள்ளோம். மேலும் சுற்றுலா பயணிகளை லிமிட்டாக பூங்காவிற்குள் அனுமதிக்கவும் திட்டமிட்டுள்ளோம்' என கூறினார்.
இந்தோனேசியாவின் சுந்தா எனும் சிறு தீவுகளில் அமைந்துள்ளது கொமோடோ தேசிய பூங்கா. கொமோடோ, படார், ரின்கா ஆகிய பெரிய தீவுகளும், 26 சிறு தீவுகளும் இப்பூங்காவில் அடங்கியுள்ளன.
இதன் மொத்த பரப்பு 1,733 சதுர கிமீ ஆகும். இந்த பூங்கா தொடக்கத்தில், கொமோடா டிராகன் எனும் அரிய பல்லி வகையை பாதுகாக்க கடந்த 1980ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
அதன்பின்னர் கடல் உயிரினங்கள் உட்பட மற்ற உயிரினங்களை பாதுகாக்க தொடங்கியது. இதையடுத்து 1991ஆம் ஆண்டு இப்பூங்கா யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. இந்த பூங்காவிற்கு லட்ச கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில், இந்த பூங்காவில் வாழும் அரிய வகை கொமோடா டிராகன்களை பாதுகாக்க கொமோடோ தேசிய பூங்காவை அடுத்த ஆண்டு இந்தோனேஷியா மூட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அழிவின் விளிம்பில் இருக்கும் கொமோடோக்களை காக்க நாங்கள் நிச்சயம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் ஆக வேண்டும்.
பெரும்பாலான சுற்றுலா பயணிகள், இந்த டிராகன்களின் வாழ்வியல் முறை குறித்து அறியவே வருகை தருகின்றனர். எனவே, ஒரு வருடத்திற்கு பிறகு திறக்கலாம் என முடிவெடுத்துள்ளோம். மேலும் சுற்றுலா பயணிகளை லிமிட்டாக பூங்காவிற்குள் அனுமதிக்கவும் திட்டமிட்டுள்ளோம்' என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X