என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அமெரிக்காவில் கைது
Byமாலை மலர்17 July 2019 7:32 AM GMT (Updated: 17 July 2019 7:32 AM GMT)
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜாண்ட்ரோ டோலடோ அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லிமா:
பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அலெஜாண்ட்ரோ டோலடோ. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. குறிப்பாக பெரு மற்றும் பிரேசிலை இணைக்கும் நெடுஞ்சாலைக்கான அரசுப் ஒப்பந்தப் பணிகளை வழங்குவதற்காக பிரேசில் கட்டுமான நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற வழக்கில் அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதவிர அவரது மனைவி, அவரது முன்னாள் தலைமை பாதுகாவலர், மகன் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்குகளில் அலெஜாண்ட்ரோ டோலடோவை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். 2017ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வரும் அலெஜாண்ட்ரோவை நாடு கடத்தும்படி அந்நாட்டு அரசுக்கு பெரு அரசு கோரிக்கை விடுத்தது.
அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட அமெரிக்க அரசு, நேற்று அலெஜாண்ட்ரோவை கைது செய்தது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நாடு கடத்துவதற்கான நடைமுறைகள் தொடங்கின. இந்த நடைமுறை முடிவதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு ஆகலாம் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X