search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேடுதல் வேட்டை
    X
    தேடுதல் வேட்டை

    ஈராக் - அமெரிக்கா தலைமையிலான விமானப்படை தாக்குதலில் 8 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

    ஈராக் நாட்டின் சலாஹுடின் பகுதியில் இன்று அமெரிக்கா தலைமையிலான விமானப்படை நடத்திய தாக்குதலில் 8 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    பாக்தாத்:

    சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் பாலைவனப்பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

    அவர்களில் சிலர் யூப்ரெட்டஸ் நதிக்கரையோரம் அமைந்துள்ள புறநகர் பகுதிகளில் பதுங்கியுள்ளனர். அங்கிருந்தவாறு அவ்வப்போது கொரில்லா போர்முறை பாணியில் அதிரடியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஈராக் நாட்டின் வடக்கில் அமைந்துள்ள சலாஹுடின் மாகாணத்துக்கு உட்பட்ட பைஜி நகரத்தை ஒட்டியுள்ள பாலைவனம் பகுதியில் உள்ள ஐ.எஸ். இயகத்தை சேர்ந்த சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஈராக் உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    விமானப்படை தாக்குதல்
    இதையடுத்து, அப்பகுதியை குறிவைத்து இன்று அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 8  பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அவர்களின் பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டதாகவும் ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    Next Story
    ×