என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு - இம்ரான்கான் இரங்கல்
Byமாலை மலர்11 July 2019 3:53 PM GMT (Updated: 11 July 2019 3:53 PM GMT)
பாகிஸ்தானில் சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
லாகூர்:
பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சாதிக்கபாத் தேசில் பகுதியில் வால்கர் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது எதிர்திசையில் வந்த பயணிகள் ரெயில் தவறான டிராக்கில் சென்று மோதியது.
இதில் பயணிகள் ரெயிலின் என்ஜின் பகுதியும் 3 பெட்டிகளும் அப்பளம் போல் நொறுங்கின. இந்த விபத்தில் ஒரு பெண், 8 ஆண்கள் உள்பட 11 பயணிகள் பலியாகினர் எனவும், 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர் எனவும் போலீசார் முதல் கட்டமாக தெரிவித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனைகளில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் சிகிச்சை பலனின்ரி இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்தார். ரெயில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு ரெயில்வே மந்திரிக்கு உத்தரவிட்டார். விபத்து ஏற்பட்டது தொடர்பான விசாரணைக்கும் அவர் உத்தவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X