என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இத்தாலியில் எரிமலை வெடித்து சுற்றுலா பயணி பலி
Byமாலை மலர்4 July 2019 7:18 PM GMT (Updated: 4 July 2019 7:18 PM GMT)
இத்தாலியில் எரிமலை திடீரென வெடித்ததில், மலையில் இருந்து விழுந்த கல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
ரோம்:
இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள சிசிலியன் பிராந்தியத்தில் ஸ்ட்ரோம்போலி என்ற தீவு உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இங்கு, கடலை ஒட்டியவாறு எரிமலை ஒன்று இருக்கிறது. இந்த எரிமலையில் அவ்வப்போது வெடிப்பு ஏற்பட்டு, சிறிதளவு எரிகுழம்புகளை கக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
பல்வேறு நாடுகளில் இருந்து ஸ்ட்ரோம்போலி தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், மலையடிவாரத்தில் இருந்து 924 மீட்டர் தூரம் வரை மலையேற்ற பயிற்சியில் ஈடுபடவும், உருகிய நிலையிலிருக்கும் பாறைகளை பார்க்கவும் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த எரிமலை திடீரென வெடித்து, எரிகுழம்பு வெளியேறியது. இதனால் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட சுற்றலா பயணிகள் பயத்தில் கடலில் குதித்தனர். எரிமலை வெடித்தபோது, மலையில் இருந்து விழுந்த கல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
எரிமலை தொடர்ந்து வெடிப்பு ஏற்பட்டு வானுயரத்துக்கு சாம்பல் புகையை கக்கி வருகிறது.
இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள சிசிலியன் பிராந்தியத்தில் ஸ்ட்ரோம்போலி என்ற தீவு உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இங்கு, கடலை ஒட்டியவாறு எரிமலை ஒன்று இருக்கிறது. இந்த எரிமலையில் அவ்வப்போது வெடிப்பு ஏற்பட்டு, சிறிதளவு எரிகுழம்புகளை கக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
பல்வேறு நாடுகளில் இருந்து ஸ்ட்ரோம்போலி தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், மலையடிவாரத்தில் இருந்து 924 மீட்டர் தூரம் வரை மலையேற்ற பயிற்சியில் ஈடுபடவும், உருகிய நிலையிலிருக்கும் பாறைகளை பார்க்கவும் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த எரிமலை திடீரென வெடித்து, எரிகுழம்பு வெளியேறியது. இதனால் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட சுற்றலா பயணிகள் பயத்தில் கடலில் குதித்தனர். எரிமலை வெடித்தபோது, மலையில் இருந்து விழுந்த கல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
எரிமலை தொடர்ந்து வெடிப்பு ஏற்பட்டு வானுயரத்துக்கு சாம்பல் புகையை கக்கி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X