search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே குண்டு வெடிப்பு: 5 பாக். ராணுவ வீரர்கள் பலி

    இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் உள்ள ஜாம்ப் பகுதி இந்திய-பாகிஸ்தான் எல்லை கோட்டுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த பகுதி இரு நாட்டின் எல்லையில் அமைந்திருப்பதால் அந்நாட்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் இன்று வீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் ரானுவத்தை சேர்ந்த 5 வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்துள்ளார்.

    இந்த குண்டு வெடிப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் உள்நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×