என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரிட்டன், நேசநாடுகளை நிலைகுலைக்கும் செயல்களை நிறுத்துங்கள் - புதினிடம் தெரசா மே கண்டிப்பு
Byமாலை மலர்28 Jun 2019 12:49 PM GMT (Updated: 28 Jun 2019 12:49 PM GMT)
பிரிட்டன் மற்றும் அதன் நேசநாடுகளை நிலைகுலைய வைக்கும் செயல்பாடுகளை ரஷியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என புதினிடம் தெரசா மே நேரில் வலியுறுத்தினார்.
டோக்கியோ:
ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல நாடுகளின் தலைவர்கள் இன்று தனித்தனியாக சந்தித்து தங்களுக்கு இடையில் உள்ள பல்வேறு விவாகரங்கள் தொடர்பாக விவாதித்தனர்.
அவ்வகையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த தெரசா மே, 'பிரிட்டனுடன் நல்லுறவு ஏற்பட வேண்டுமானால், பொறுப்பற்ற முறையில் பிரிட்டன் மற்றும் அதன் நேசநாடுகளை அச்சுறுத்தும் வகையில் நிலைகுலைய வைக்கும் செயல்பாடுகளை ரஷியா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பிறநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது, சைபர் தாக்குதல் ஆகியவற்றையும் கைவிட வேண்டும்’ என வலியுறுத்தினார்.
ரஷியாவுடன் வேறு வகையிலான நல்லுறவை வளர்த்துக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அவ்வாறு ஏற்பட வேண்டுமானால் ரஷிய அரசும் வேறு பாதையில் பயணிக்க முன்வர வேண்டும் எனவும் புதினிடம் தெரசா மே அறிவுறுத்தினார்.
பிரிட்டன் நாட்டில் உள்ள சாலிஸ்பரி நகரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரஷியாவின் முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகளை விஷம் வைத்துக் கொல்ல மர்மநபர்கள் முயன்றனர். உரிய நேரத்தில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் இருவரும் உயிர் பிழைத்தனர்.
இந்த சம்பவத்துக்கு ரஷியாவை பிரிட்டன் அரசு குற்றம்சாட்டி வருவதும், ரஷியா தொடர்ந்து மறுத்து வருவதும் நினைவிருக்கலாம். இதன் எதிரொலியாக லண்டன் - மாஸ்கோ இடையிலான தூதரக உறவுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தெரசா மே - புதின் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
செர்கெய் ஸ்கிரிபால் கொலை முயற்சி சதி திட்டத்தில் ரஷியாவின் நேரடி பங்களிப்பு தொடர்பாக தன்னிடம் அசைக்க முடியாத ஆதாரம் இருப்பதாக புதினிடம் இன்று தெரசா மே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X