search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடை
    X

    ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடை

    ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா நேற்று விதித்தது. இதற்கான நிறைவேற்று ஆணையில் டிரம்ப் கையெழுத்து போட்டார்.
    வாஷிங்டன்:

    அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தநிலையில், ஈரான் மீது பறந்த அமெரிக்க உளவு விமானத்தை அந்த நாடு கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது. இது அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    எனவே ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். பின்னர் கடைசி நேரத்தில் அதை திரும்ப பெற்றார். எனினும் ஈரான் மீது கோபத்தில் இருக்கும் அமெரிக்கா, அந்த நாட்டுக்கு ஏதாவது தண்டனை விதிக்க வழி தேடி வந்தது.

    இந்தநிலையில் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா நேற்று விதித்தது. மேலும் ஈரானிய தலைவர் மற்றும் அதிகாரிகள் அமெரிக்காவில் நிதி பரிவர்த்தனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதற்கான நிறைவேற்று ஆணையில் டிரம்ப் கையெழுத்து போட்டார்.

    இது தொடர்பாக தனது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ‘ஈரான் உள்பட எந்த நாட்டுடனும் நாங்கள் மோதல் போக்கை விரும்பவில்லை. எனினும் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் வைத்திருக்க நாங்கள் விடமாட்டோம் என்பதை மட்டும் என்னால் கூற முடியும்’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×