என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கையின் தற்போதைய நிலைக்கு அதிகார குறைப்பு நடவடிக்கையே காரணம்: சிறிசேனா
Byமாலை மலர்24 Jun 2019 3:23 AM GMT (Updated: 24 Jun 2019 3:23 AM GMT)
இலங்கையின் தற்போதைய நிலைக்கு அதிபரின் அதிகார குறைப்பு நடவடிக்கையே காரணம் என்று சிறிசேனா குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பு :
இலங்கை அதிபராக சிறிசேனா 2015-ம் ஆண்டு பதவி ஏற்றார். அதன்பிறகு, அரசியல் சட்டத்தில் 19-வது திருத்தத்தை கொண்டு வந்தார். அதன்படி, அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. கடந்த ஆண்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுடனான மோதலால், அவரை நீக்கி விட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் சிறிசேனா நியமித்தார். இதனால், இரண்டு மாதங்களாக குழப்பநிலை நிலவியது.
இந்நிலையில், கொழும்பு நகரில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அதிபர் சிறிசேனா பேசியதாவது:-
இந்த அரசின் மிகப்பெரிய தவறு, 19-வது திருத்தம். அது, ஸ்திரமற்ற தன்மையை உண்டாக்கி விட்டது. நாம் ஸ்திரமற்ற அரசை நடத்தி வருவதாகவும், நானும், பிரதமரும் ஆளுக்கொரு பக்கம் அரசை இழுத்து வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதற்கு காரணம் 19-வது திருத்தம்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
இலங்கை அதிபராக சிறிசேனா 2015-ம் ஆண்டு பதவி ஏற்றார். அதன்பிறகு, அரசியல் சட்டத்தில் 19-வது திருத்தத்தை கொண்டு வந்தார். அதன்படி, அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. கடந்த ஆண்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுடனான மோதலால், அவரை நீக்கி விட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் சிறிசேனா நியமித்தார். இதனால், இரண்டு மாதங்களாக குழப்பநிலை நிலவியது.
இந்நிலையில், கொழும்பு நகரில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அதிபர் சிறிசேனா பேசியதாவது:-
இந்த அரசின் மிகப்பெரிய தவறு, 19-வது திருத்தம். அது, ஸ்திரமற்ற தன்மையை உண்டாக்கி விட்டது. நாம் ஸ்திரமற்ற அரசை நடத்தி வருவதாகவும், நானும், பிரதமரும் ஆளுக்கொரு பக்கம் அரசை இழுத்து வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதற்கு காரணம் 19-வது திருத்தம்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X