search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கா: மனைவி, மகன்களை கொன்றுவிட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தற்கொலை
    X

    அமெரிக்கா: மனைவி, மகன்களை கொன்றுவிட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தற்கொலை

    இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் அயோவா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் டெஸ் மொய்னஸ் பகுதியை சேர்ந்தவர் சந்திர சேகர் சுங்காரா (44). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
     
    இவர் தனது மனைவி லாவண்யா சுங்காரா (41), 15 மற்றும் 10 வயதுள்ள 2 மகன்களுடன் தங்கியிருந்தார். இந்தநிலையில் இவர்கள் 4 பேரும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிரேதமாக கிடந்தனர். தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் 4 பேரின் பிரேதங்களையும் மீட்டு விசாரணை நடத்தினர்.

    இறந்து கிடந்த 4 பேரின் உடல்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.



    இந்நிலையில், சந்திர சேகர் சுங்காரா தனது மனைவி மற்றும் குழந்தைகளை சுட்டுக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து சந்திர சேகர் சுங்காரா தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  

    தடயவியல் சோதனை முடிவுகளின் அடிப்படையில் சந்திர சேகர் சுங்காரா தனது குடும்பத்தினரை கொலை செய்து, தானும் தற்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
    Next Story
    ×