என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒப்படைப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் தீவிரம்- ஹாங்காங் தலைமை நிர்வாகி மன்னிப்பு கோரினார்
Byமாலை மலர்17 Jun 2019 3:59 AM GMT (Updated: 17 Jun 2019 3:59 AM GMT)
ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய ஒப்படைப்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, தலைமை நிர்வாகி மன்னிப்பு கோரினார்.
ஹாங்காங்:
ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், அவர்களை அந்த நாடுகளிடம் ஒப்படைக்க வகை செய்யும் ஒப்படைப்பு சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்த வன்முறை மற்றும் போலீசாரின் நடவடிக்கையில் பலர் காயமடைந்தனர்.
மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததால் அரசு பணிந்தது. சர்ச்சைக்குரிய நாடு கடத்தும் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஆனால், போலீசாரின் அத்துமீறிய நடவடிக்கைக்கு பொறுப்பேற்று, ஹாங்காங் தலைமை நிர்வாகி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று ஹாங்காங் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அனைத்து வீதிகளிலும் போராட்டக்காரர்கள் திரண்டிருந்தனர். நகரமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு சுமார் 20 லட்சம் பேர் திரண்டு போராட்டம் நடத்தியதால், தலைமை நிர்வாகி கேரி லாம் மன்னிப்பு கோரினார். ஆனால் பதவி விலக மறுத்துவிட்டார்.
ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், அவர்களை அந்த நாடுகளிடம் ஒப்படைக்க வகை செய்யும் ஒப்படைப்பு சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தின் அருகே தீவிரமான போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 10 லட்சம் பேர் திரண்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டனர். சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தை கொண்டு வந்த ஹாங்காங் தலைமை நிர்வாகி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்த வன்முறை மற்றும் போலீசாரின் நடவடிக்கையில் பலர் காயமடைந்தனர்.
மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததால் அரசு பணிந்தது. சர்ச்சைக்குரிய நாடு கடத்தும் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஆனால், போலீசாரின் அத்துமீறிய நடவடிக்கைக்கு பொறுப்பேற்று, ஹாங்காங் தலைமை நிர்வாகி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று ஹாங்காங் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அனைத்து வீதிகளிலும் போராட்டக்காரர்கள் திரண்டிருந்தனர். நகரமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு சுமார் 20 லட்சம் பேர் திரண்டு போராட்டம் நடத்தியதால், தலைமை நிர்வாகி கேரி லாம் மன்னிப்பு கோரினார். ஆனால் பதவி விலக மறுத்துவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X