என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கல் - 50 பேர் பற்றிய விவரங்களை இந்தியாவுக்கு வழங்க நடவடிக்கை
Byமாலை மலர்16 Jun 2019 8:19 PM GMT (Updated: 16 Jun 2019 8:19 PM GMT)
சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் 50 பேர் பற்றிய விவரங்களை இந்தியாவுக்கு வழங்க அந்த நாடு நடவடிக்கை எடுத்து உள்ளது.
பெர்னே:
பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த கோடீசுவரர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு வரி செலுத்துவதில் இருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் கோடிக்கணக்கில் கருப்பு பணம் பதுக்கி வருகின்றனர். இவர்களை பற்றிய விவரங்களை அந்த நாட்டு அரசு பாதுகாத்து வருவதால், வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரின் சொர்க்கபுரியாக சுவிட்சர்லாந்து விளங்கி வருகிறது.
இத்தகைய சுவிஸ் வங்கிகளில் இந்தியாவை சேர்ந்த பெரும் செல்வந்தர்கள் பலரும் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை சேமித்து உள்ளனர். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக விளங்கி வருகிறது. இந்த பணத்தை மீட்டு கொண்டு வருவதும் சிரமமாக உள்ளது.
எனவே இந்த வரி ஏய்ப்பாளர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் முந்தைய பா.ஜனதா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியோர் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்ததுடன், அவர்களின் விவரங்களை வழங்குமாறு சுவிட்சர்லாந்து அரசுடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்படி பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக சுவிட்சர்லாந்து அரசு இறங்கி வந்தது. தனது நாட்டு வங்கிகளில் பணம் பதுக்கிய இந்தியர்களின் விவரங்களை வழங்க ஒப்புதல் அளித்தது. பின்னர் இது தொடர்பாக இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இதைத்தொடர்ந்து சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை வழங்கும் நடவடிக்கையில் அந்த நாடு இறங்கி உள்ளது. அதன்படி அங்கு பணம் பதுக்கியிருக்கும் சுமார் 50 பேரின் விவரங்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது.
அப்போது, தங்களை பற்றிய விவரங்களை மத்திய அரசுக்கு வழங்குவதற்கு ஆட்சேபம் தெரிவித்து அவர்கள் மேல்முறையீடு செய்தனர். ஆனால் அதற்கு போதுமான ஆவணங்களை அவர்கள் தாக்கல் செய்யவில்லை எனக்கூறி அவற்றை சுவிட்சர்லாந்து அரசு தள்ளுபடி செய்து விட்டது. எனவே அந்த 50 பேர் பற்றிய விவரங்கள் விரைவில் இந்தியாவுக்கு கிடைக்கும் என தெரிகிறது.
இந்த 50 தனிநபர்களும் பல்வேறு நிறுவனங்களுடன் (போலி நிறுவனங்கள் உள்பட) தொடர்புடைய வியாபாரிகள் என கூறப்படுகிறது. குறிப்பாக ரியல் எஸ்டேட், நிதிசேவை, தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு, வீடு அலங்காரம், ஜவுளி, என்ஜினீயரிங் பொருட்கள், ஆபரண கற்கள் மற்றும் ஜூவல்லரி துறைகளை சேர்ந்த வியாபாரிகள் என தெரியவந்துள்ளது.
பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த கோடீசுவரர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு வரி செலுத்துவதில் இருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் கோடிக்கணக்கில் கருப்பு பணம் பதுக்கி வருகின்றனர். இவர்களை பற்றிய விவரங்களை அந்த நாட்டு அரசு பாதுகாத்து வருவதால், வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரின் சொர்க்கபுரியாக சுவிட்சர்லாந்து விளங்கி வருகிறது.
இத்தகைய சுவிஸ் வங்கிகளில் இந்தியாவை சேர்ந்த பெரும் செல்வந்தர்கள் பலரும் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை சேமித்து உள்ளனர். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக விளங்கி வருகிறது. இந்த பணத்தை மீட்டு கொண்டு வருவதும் சிரமமாக உள்ளது.
எனவே இந்த வரி ஏய்ப்பாளர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் முந்தைய பா.ஜனதா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியோர் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்ததுடன், அவர்களின் விவரங்களை வழங்குமாறு சுவிட்சர்லாந்து அரசுடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்படி பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக சுவிட்சர்லாந்து அரசு இறங்கி வந்தது. தனது நாட்டு வங்கிகளில் பணம் பதுக்கிய இந்தியர்களின் விவரங்களை வழங்க ஒப்புதல் அளித்தது. பின்னர் இது தொடர்பாக இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இதைத்தொடர்ந்து சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை வழங்கும் நடவடிக்கையில் அந்த நாடு இறங்கி உள்ளது. அதன்படி அங்கு பணம் பதுக்கியிருக்கும் சுமார் 50 பேரின் விவரங்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது.
அப்போது, தங்களை பற்றிய விவரங்களை மத்திய அரசுக்கு வழங்குவதற்கு ஆட்சேபம் தெரிவித்து அவர்கள் மேல்முறையீடு செய்தனர். ஆனால் அதற்கு போதுமான ஆவணங்களை அவர்கள் தாக்கல் செய்யவில்லை எனக்கூறி அவற்றை சுவிட்சர்லாந்து அரசு தள்ளுபடி செய்து விட்டது. எனவே அந்த 50 பேர் பற்றிய விவரங்கள் விரைவில் இந்தியாவுக்கு கிடைக்கும் என தெரிகிறது.
இந்த 50 தனிநபர்களும் பல்வேறு நிறுவனங்களுடன் (போலி நிறுவனங்கள் உள்பட) தொடர்புடைய வியாபாரிகள் என கூறப்படுகிறது. குறிப்பாக ரியல் எஸ்டேட், நிதிசேவை, தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு, வீடு அலங்காரம், ஜவுளி, என்ஜினீயரிங் பொருட்கள், ஆபரண கற்கள் மற்றும் ஜூவல்லரி துறைகளை சேர்ந்த வியாபாரிகள் என தெரியவந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X