என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நியூசிலாந்தில் விமானங்கள் நேருக்கு நேர் மோதல் - 2 விமானிகள் பலி
Byமாலை மலர்16 Jun 2019 7:01 PM GMT (Updated: 16 Jun 2019 7:01 PM GMT)
நியூசிலாந்தில் சிறிய ரக விமானங்களும் சற்றும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 விமானகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
வெலிங்டன்:
நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாஸ்டர்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி தவிர பயணிகள் இல்லை.
அதே வேளையில் மற்றொரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று மாஸ்டர்டன் விமான நிலையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தது. இந்த விமானத்திலும் விமானி தவிர பயணிகள் இல்லை.
இந்த 2 விமானங்களும் விமான நிலையத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் 2 விமானங்களிலும் தீப்பிடித்தது.
பின்னர் அந்த விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கின. இந்த கோர விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாஸ்டர்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி தவிர பயணிகள் இல்லை.
அதே வேளையில் மற்றொரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று மாஸ்டர்டன் விமான நிலையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தது. இந்த விமானத்திலும் விமானி தவிர பயணிகள் இல்லை.
இந்த 2 விமானங்களும் விமான நிலையத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் 2 விமானங்களிலும் தீப்பிடித்தது.
பின்னர் அந்த விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கின. இந்த கோர விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X