என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் விற்பனை நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு
Byமாலை மலர்15 Jun 2019 8:18 PM GMT (Updated: 15 Jun 2019 8:18 PM GMT)
அமெரிக்காவில் விற்பனை நிறுவனத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டின்போது ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள கரோனாவில், உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருட்களை விற்பனை செய்கிற மொத்த விற்பனை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு இந்த நிறுவனத்தில் ஒரு குழந்தையுடன் வந்த பெண்ணுக்கும், வெள்ளைக்காரர் ஒருவருக்கும் இடையே வாய்த்தகராறு மூண்டது.
இந்த தகராறு முற்றியபோது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் அதிர்ந்து போன மக்கள் பதற்றத்துடன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். எனினும் துப்பாக்கிச்சூட்டின்போது ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.இது குறித்து தகவல் அறிந்ததும் உள்ளூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் துப்பாக்கிச்சூட்டையும், அதில் ஒருவர் பலியானதையும் உறுதி செய்தனர். ஆனால் கூடுதல் தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் சம்பவ இடத்தில் இருந்த அனைவரையும் போலீசார் பத்திரமாக வெளியேற்றினர்.
துப்பாக்கிச்சூடு நடந்தபோது அங்கிருந்து மக்கள் பதற்றத்துடன் வெளியேறியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலரும் கீழே விழுந்து காயம் அடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள கரோனாவில், உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருட்களை விற்பனை செய்கிற மொத்த விற்பனை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு இந்த நிறுவனத்தில் ஒரு குழந்தையுடன் வந்த பெண்ணுக்கும், வெள்ளைக்காரர் ஒருவருக்கும் இடையே வாய்த்தகராறு மூண்டது.
இந்த தகராறு முற்றியபோது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் அதிர்ந்து போன மக்கள் பதற்றத்துடன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். எனினும் துப்பாக்கிச்சூட்டின்போது ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.இது குறித்து தகவல் அறிந்ததும் உள்ளூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் துப்பாக்கிச்சூட்டையும், அதில் ஒருவர் பலியானதையும் உறுதி செய்தனர். ஆனால் கூடுதல் தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் சம்பவ இடத்தில் இருந்த அனைவரையும் போலீசார் பத்திரமாக வெளியேற்றினர்.
துப்பாக்கிச்சூடு நடந்தபோது அங்கிருந்து மக்கள் பதற்றத்துடன் வெளியேறியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலரும் கீழே விழுந்து காயம் அடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X