search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எண்ணை உற்பத்தியை அதிகரிக்க சவுதிஅரேபியா ஒப்புதல்- டிரம்ப் தகவல்
    X

    எண்ணை உற்பத்தியை அதிகரிக்க சவுதிஅரேபியா ஒப்புதல்- டிரம்ப் தகவல்

    எண்ணை உற்பத்தியை அதிகரிக்க சவுதிஅரேபியா ஒப்புதல் அளித்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #Trump #SaudiArabiaapproves

    வாஷிங்டன்:

    ஈரானின் அணுஆயுத உற்பத்தி பிரச்சினையால் 2015-ம் ஆண்டு ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது. மேலும் ஈரானில் எண்ணை வருவாயை மூடக்கும் வகையில் அந்நாட்டிடம் இருந்து கக்சா எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கபோவதாக மிரட்டல் விடுத்தது.

    எனினும் இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளித்தது. இருப்பினும் 6 மாதங்களுக்குள் ஈரானிடம் இருந்து எண்ணை வாங்குவதை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்தது. அந்த கெடு வருகிற மே 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.

    இருந்தாலும் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மேலும் சலுகையை நீடிக்க முடியாது என அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும். விலையும் கணிசமாக உயிரும் அபாயம் உள்ளது.

    இதற்கு தீர்வுகாணும் வகையில் டிரம்ப் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ஈரானிடம் இருந்து எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகள் அச்சம் கொள்ள தேவையில்லை.

    சவுதி அரேபியா மற்றும் ‘ஒபெக்’ அமைப்பில் உள்ள நாடுகள் எனது வேண்டுகோளை ஏற்று எண்ணை உற்பத்தியை அதிகரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இதே கருத்தைதான் அவர் கூறினார். எண்ணையை தாராளமாக உற்பத்தி செய்யுமாறு ஒபக் நாடுகள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளன.

    இதனால் பெட்ரோல் விலை குறையும் என்றார். இருந்தாலும் கடந்த மாதத்தில் இருந்து கச்சா எண்ணை விலை 33 சதவீதம் உயர்ந்துள்ளது.

    அதே நேரத்தில் டுவிட்டரில் மற்றொரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கலிபோர்னியாவில் பெட்ரோல் மீது வரி விதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்வு பிரச்சினை எழுந்துள்ளது. பெட்ரோல் விலையை குறைக்க அம்மாநில கவர்னருடன் பேசுவேன் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×