search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெல்ஜியம் நாட்டில் காந்தி சிலைக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மலரஞ்சலி
    X

    பெல்ஜியம் நாட்டில் காந்தி சிலைக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மலரஞ்சலி

    ஆசிய-ஐரோப்பா நாடுகளின் 12-வது மாநாட்டில் பங்கேற்க பெல்ஜியம் வந்துள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அன்ட்வெர்ப் நகரில் உள்ள காந்தி சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார். #VenkaiahNaidu
    புருசெல்ஸ்:

    12-வது ஆசிய ஐரோப்பிய நாடுகளின் மாநாடு பெல்ஜியம் நாட்டின் பிருசெல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இரு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா ஆகிய துறைகள் குறித்து ஆசிய, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

    இதில் பங்கேற்பதற்காக பிருசெல்ஸ் வந்துள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பெல்ஜியம் மன்னர் பிலிப், பிரதமர் சார்லஸ் மைக்கேல் ஆகியோரையும் பகிரீஸ், போர்ச்சுக்கல், ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களையும் நேற்று சந்தித்துப் பேசினார்.



    அங்கு வாழும் இந்தியர்கள் இன்று நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அவர் இன்று அன்ட்வெர்ப் நகருக்கு சென்று அங்குள்ள காந்தி சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். #VenkaiahNaidu #MahatmaGandhiBust #VenkaiahNaiduinBelgium #GandhistatueinAntwerp
    Next Story
    ×