search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 2 இந்தியர்கள் உட்பட 19 பேர் கைது
    X

    அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 2 இந்தியர்கள் உட்பட 19 பேர் கைது

    மெக்சிகோவில் இருந்து படகு வழியே அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 2 இந்தியர்கள் உட்பட 19 பேரை அமெரிக்க கடலோர காவல்படை கைது செய்தது. #America
    நியூயார்க்:

    மெக்சிகோவில் இருந்து பங்கா வகை படகு ஒன்று பலரை ஏற்றி கொண்டு அமெரிக்க கடற்பகுதிக்குள் நுழைந்தது. இதனை வான் மற்றும் கடல்வழி நடவடிக்கைகளுக்கான விமானம் ஒன்று கண்டறிந்தது.  இதுபற்றி அமெரிக்க கடலோர காவல் படையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த படகு அமெரிக்க கடலோர காவல் படையால் தடுத்து நிறுத்தப்பட்டது.

    அந்த படகில் 2 இந்தியர்கள் உட்பட மொத்தம் 19 பேர் இருந்துள்ளனர்.  சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்ற அவர்கள் அனைவரையும் கைது செய்த கடலோர காவல்படை, அதில் இருவர் கடத்தல்காரர்கள் என்பதையும் கண்டறிந்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #America
    Next Story
    ×