search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உகாண்டாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
    X

    உகாண்டாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

    அரசுமுறை பயணமாக இன்று எண்ட்டெபே நகரை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசேவேனி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    கம்பாலா:

    தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகனஸ்பர்க் நகரில் நாளை நடைபெறும் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக ருவாண்டா நாட்டில் நேற்றும், இன்றும் சுற்றுப்பயணம் செய்தார். ருவாண்டா பயணத்தை நிறைவுசெய்த மோடி இன்று மாலை உகாண்டா வந்தடைந்தார்.

    உகாண்டா நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கடற்கரை நகரமான எண்ட்டெபே நகர விமான நிலையத்தில் உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி தலைமையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முப்படையினர் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    எண்ட்டேபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார். உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் மோடி முன்னிலையில் இந்தியா - உகாண்டா இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Modiinuganda
    Next Story
    ×