search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உகாண்டாவில் டிராக்டர் மீது மோதிய பேருந்து லாரியையும் பதம் பார்த்த விபத்தில் 48 பேர் பலி
    X

    உகாண்டாவில் டிராக்டர் மீது மோதிய பேருந்து லாரியையும் பதம் பார்த்த விபத்தில் 48 பேர் பலி

    உகாண்டாவின் வடக்கு பகுதியில் பேருந்து ஒன்று டிராக்டர் மற்றும் லாரியில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 16 குழந்தைகள் உட்பட 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #UgandaBusAccident

    கம்பாலா:

    உகாண்டாவில் சாலை போக்குவரத்து மிகவும் அபாயகரமானதாகும். அங்கு 2015 முதல் 2017-ம் ஆண்டு வரையில் நடந்த சாலை விபத்துகளில் 9,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள் கிர்யாடோங்கோ என்னும் பகுதியில் பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் எதிரே டிராக்டர் ஒன்று விளக்கு இல்லாமல் வந்துள்ளது. இரவு நேரம் என்பதால் இருட்டில் அந்த டிரக்டருடன் பேருந்து மோதியுள்ளது. 



    அதோடு பின்னே பீர் பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி மீது அந்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 குழந்தைகள் உட்பட 48 பேர் மரணமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #UgandaBusAccident
    Next Story
    ×