search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கப்பூரில் காந்தி சிலை- ஜூன் 2-ம் தேதி மோடி திறந்து வைக்கிறார்
    X

    சிங்கப்பூரில் காந்தி சிலை- ஜூன் 2-ம் தேதி மோடி திறந்து வைக்கிறார்

    மூன்றுநாள் பயணமாக சிங்கப்பூர் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 2-ம் தேதி அங்கு மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைக்கிறார். #PMModi #MahatmaGandhi
    சிங்கப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி மூன்றுநாள் பயணமாக சிங்கப்பூர் நாட்டுக்கு செல்கிறார். இந்தியர்கள், குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதிக்கு செல்லும் மோடி, அங்குள்ள நம் நாட்டவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    இந்தியாவில் உள்ள கைவினை கலைஞர்கள் குறுகிய காலம் சிங்கப்பூருக்கு சென்று தங்களது தொழில் திறமையை அங்குள்ளவர்களுக்கு பயிற்றுவிக்கும் வகையில் புதிய கலைக்கூடத்தை திறந்து வைக்கும் அவர், அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிடுகிறார்.

    சவுத் பிரிட்ஜ் ரோடு பகுதியில் உள்ள நூற்றாண்டு கால பழமை வாய்ந்த இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்யும் பிரதமர் மோடி, மெரினா பே பகுதியில் உள்ள பிரபல கிளிஃபர் பையர் உணவகத்தின் அருகே ஜூன் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைக்கிறார். #PMModi #MahatmaGandhi
    Next Story
    ×