என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி
Byமாலை மலர்5 May 2018 10:53 AM GMT (Updated: 5 May 2018 10:53 AM GMT)
ஜப்பானில் காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் முதல்முறையாக பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. #japanbullfighting #womenpermit
டோக்கியோ:
ஜப்பானில் பாரம்பரியமாக டோக்யு எனப்படும் காளை சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சண்டை வளையத்திற்குள் இரண்டு காளை விடப்பட்டு மோத வைக்கப்படும். மாடுகளை உற்றாகப்படுத்தி அதனை மோத வைக்க காளைகளின் பயிற்சியாளர்கள் போட்டி வளையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். இதுவரை ஆண்கள் மட்டுமே வளையத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், யாமகோஷி மாவட்டத்தில் நடைபெற்ற டோக்யு போட்டியில் முதல்முறையாக யுகி அரகி என்ற பெண் போட்டி வளையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சில மாதங்களுக்கு முன் சுமோ மல்யுத்த வளையத்திற்குள் சென்று முதலுதவி செய்ய முயன்ற பெண்கள் வெளியேற்றப்பட்டனர். பெண்கள் நுழைந்ததால் அந்த இடம் அசுத்தம் அடைந்ததாக கூறி, அதனை உப்பு, ஒயின் மற்றும் அரிசி கொண்டு தூய்மைப்படுத்தினர். இதைத்தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #japanbullfighting #womenpermit
ஜப்பானில் பாரம்பரியமாக டோக்யு எனப்படும் காளை சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சண்டை வளையத்திற்குள் இரண்டு காளை விடப்பட்டு மோத வைக்கப்படும். மாடுகளை உற்றாகப்படுத்தி அதனை மோத வைக்க காளைகளின் பயிற்சியாளர்கள் போட்டி வளையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். இதுவரை ஆண்கள் மட்டுமே வளையத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், யாமகோஷி மாவட்டத்தில் நடைபெற்ற டோக்யு போட்டியில் முதல்முறையாக யுகி அரகி என்ற பெண் போட்டி வளையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சில மாதங்களுக்கு முன் சுமோ மல்யுத்த வளையத்திற்குள் சென்று முதலுதவி செய்ய முயன்ற பெண்கள் வெளியேற்றப்பட்டனர். பெண்கள் நுழைந்ததால் அந்த இடம் அசுத்தம் அடைந்ததாக கூறி, அதனை உப்பு, ஒயின் மற்றும் அரிசி கொண்டு தூய்மைப்படுத்தினர். இதைத்தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #japanbullfighting #womenpermit
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X