என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷியா மீது புதிய பொருளாதார தடை: குடியரசு, ஜனநாயக கட்சிகள் இடையே உடன்பாடு
Byமாலை மலர்23 July 2017 9:29 PM GMT (Updated: 23 July 2017 9:29 PM GMT)
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்ட விவகாரத்தில், ரஷியா மீது புதிய பொருளாதார தடைகள் விதிப்பதற்கு குடியரசு, ஜனநாயக கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்ட விவகாரத்தில், ரஷியா மீது புதிய பொருளாதார தடைகள் விதிப்பதற்கு குடியரசு, ஜனநாயக கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சற்றும் எதிர்பாராத வகையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் தோல்வியை தழுவினார்.
ஹிலாரி தோல்வி அடையவும், டிரம்ப் வெற்றி பெறவும் ஏற்ற வகையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா நேரடியாக தலையிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு உண்மை என அமெரிக்க புலனாய்வு அமைப்பு நம்புகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்க பாராளுமன்றம் விசாரணை நடத்துகிறது.
ஆனால் அமெரிக்க தேர்தலில் தான் தலையிட்டதாக கூறுவதை ரஷியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்த நிலையில், ரஷியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பதற்கு சட்டம் இயற்றுவதில் அமெரிக்க பாராளுமன்றத்தில் குடியரசு கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய சட்டமானது, ரஷியா மீது விதிக்கிற பொருளாதார தடைகளை டிரம்ப் அகற்றுவதற்கான திறனை குறைப்பதாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷியா மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ராஜ்ய ரீதியில்தான் அணுக வேண்டும் என்று டிரம்ப் கூறி வந்த நிலையில், இப்போது இரு கட்சிகள் இடையே ஏற்பட்டிருக்கிற உடன்பாடு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி அமெரிக்க ஊடகத்துறையினர் கருத்து தெரிவிக்கையில், “டிரம்பின் கருத்து என்னவாக இருந்தாலும், ரஷியாவுக்கு எதிராக ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருப்பதைத்தான் இரு கட்சிகள் இடையேயான உடன்பாடு காட்டுகிறது” என்று கூறுகின்றனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, “ஜனாதிபதி டிரம்ப் இந்த சட்ட மசோதா மீது தனது மறுப்புரிமையை பயன்படுத்தி நிராகரிக்க முடியும். ஆனால் அவர் அப்படிச்செய்தால் அது ரஷியாவுக்கு அவர் மிகவும் ஆதரவாக உள்ளார் என்ற யூகத்தை ஏற்படுத்தும். அதேபோன்று, மசோதாவில் கையெழுத்திட்டு, சட்டமாக்கினால் அது டிரம்ப் தனது நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கையாக அமையும்” என்று குறிப்பிட்டனர்.
ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் செனட் சபை உறுப்பினருமான பென் கார்டின் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “மிகத் தீவிரமான பேச்சு வார்த்தைக்குப் பின்னர்தான் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மக்கள் சார்பிலும், நமது கூட்டாளிகள் சார்பிலும், ரஷிய அதிபர் புதினுக்கு ஒரு தெளிவான செய்தியை விடுப்பதாக இது அமைந்துள்ளது. இந்த செய்தி, புதினை போய்ச் சேருவதில் ஜனாதிபதி டிரம்ப் உதவி தேவை” என்று கூறினார்.
செனட் சபையின் ஜனநாயக கட்சி தலைவர் சுக் சூமர் கூறும்போது, “வலுவான தடைகள் விதிப்பதற்கான மசோதா தேவையான ஒன்று. இரு தரப்பு உடன்பாட்டின் அடிப்படையில் இந்த மசோதா சட்டமாவதற்கு இரு சபைகளிலும் சரியானபடிக்கு செயல்படுவோம்” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்ட விவகாரத்தில், ரஷியா மீது புதிய பொருளாதார தடைகள் விதிப்பதற்கு குடியரசு, ஜனநாயக கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சற்றும் எதிர்பாராத வகையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் தோல்வியை தழுவினார்.
ஹிலாரி தோல்வி அடையவும், டிரம்ப் வெற்றி பெறவும் ஏற்ற வகையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா நேரடியாக தலையிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு உண்மை என அமெரிக்க புலனாய்வு அமைப்பு நம்புகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்க பாராளுமன்றம் விசாரணை நடத்துகிறது.
ஆனால் அமெரிக்க தேர்தலில் தான் தலையிட்டதாக கூறுவதை ரஷியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்த நிலையில், ரஷியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பதற்கு சட்டம் இயற்றுவதில் அமெரிக்க பாராளுமன்றத்தில் குடியரசு கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய சட்டமானது, ரஷியா மீது விதிக்கிற பொருளாதார தடைகளை டிரம்ப் அகற்றுவதற்கான திறனை குறைப்பதாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷியா மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ராஜ்ய ரீதியில்தான் அணுக வேண்டும் என்று டிரம்ப் கூறி வந்த நிலையில், இப்போது இரு கட்சிகள் இடையே ஏற்பட்டிருக்கிற உடன்பாடு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி அமெரிக்க ஊடகத்துறையினர் கருத்து தெரிவிக்கையில், “டிரம்பின் கருத்து என்னவாக இருந்தாலும், ரஷியாவுக்கு எதிராக ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருப்பதைத்தான் இரு கட்சிகள் இடையேயான உடன்பாடு காட்டுகிறது” என்று கூறுகின்றனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, “ஜனாதிபதி டிரம்ப் இந்த சட்ட மசோதா மீது தனது மறுப்புரிமையை பயன்படுத்தி நிராகரிக்க முடியும். ஆனால் அவர் அப்படிச்செய்தால் அது ரஷியாவுக்கு அவர் மிகவும் ஆதரவாக உள்ளார் என்ற யூகத்தை ஏற்படுத்தும். அதேபோன்று, மசோதாவில் கையெழுத்திட்டு, சட்டமாக்கினால் அது டிரம்ப் தனது நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கையாக அமையும்” என்று குறிப்பிட்டனர்.
ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் செனட் சபை உறுப்பினருமான பென் கார்டின் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “மிகத் தீவிரமான பேச்சு வார்த்தைக்குப் பின்னர்தான் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மக்கள் சார்பிலும், நமது கூட்டாளிகள் சார்பிலும், ரஷிய அதிபர் புதினுக்கு ஒரு தெளிவான செய்தியை விடுப்பதாக இது அமைந்துள்ளது. இந்த செய்தி, புதினை போய்ச் சேருவதில் ஜனாதிபதி டிரம்ப் உதவி தேவை” என்று கூறினார்.
செனட் சபையின் ஜனநாயக கட்சி தலைவர் சுக் சூமர் கூறும்போது, “வலுவான தடைகள் விதிப்பதற்கான மசோதா தேவையான ஒன்று. இரு தரப்பு உடன்பாட்டின் அடிப்படையில் இந்த மசோதா சட்டமாவதற்கு இரு சபைகளிலும் சரியானபடிக்கு செயல்படுவோம்” என்று குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X