என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெல்ஜியம்: பிரசெல்ஸ் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக்கொலை
Byமாலை மலர்20 Jun 2017 11:43 PM GMT (Updated: 20 Jun 2017 11:44 PM GMT)
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசெல்ஸ் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு பெல்ட்டுடன் நுழைந்து சிறிய வெடிவிபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
பிரசெல்ஸ்:
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசெல்ஸ் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு பெல்ட்டுடன் நுழைந்து சிறிய வெடிவிபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்ஸில் உள்ள முக்கிய மத்திய ரெயில் நிலயத்தில் இன்று நுழைந்த நபர் சிறிய அளவிலான வெடிவிபத்தை ஏற்படுத்தினார். இதனால், ரெயில் நிலையத்தின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்தது. உடனே, அங்கிருந்த போலீசார் அந்நபரை சுட்டுக்கொன்றனர்.
அந்த நபர் தன்னுடைய உடலில் வெடிகுண்டுகள் அடங்கிய பெல்ட்டை எடுத்துவந்துள்ளார். இதனையடுத்து, போலீசார் அந்த குண்டுகளை செயலிக்க செய்தனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயமில்லை என தெரிவித்துள்ள போலீசார், அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு மார்ச் மாதம் இதே நகரில் உள்ள விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசெல்ஸ் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு பெல்ட்டுடன் நுழைந்து சிறிய வெடிவிபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்ஸில் உள்ள முக்கிய மத்திய ரெயில் நிலயத்தில் இன்று நுழைந்த நபர் சிறிய அளவிலான வெடிவிபத்தை ஏற்படுத்தினார். இதனால், ரெயில் நிலையத்தின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்தது. உடனே, அங்கிருந்த போலீசார் அந்நபரை சுட்டுக்கொன்றனர்.
அந்த நபர் தன்னுடைய உடலில் வெடிகுண்டுகள் அடங்கிய பெல்ட்டை எடுத்துவந்துள்ளார். இதனையடுத்து, போலீசார் அந்த குண்டுகளை செயலிக்க செய்தனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயமில்லை என தெரிவித்துள்ள போலீசார், அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு மார்ச் மாதம் இதே நகரில் உள்ள விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X