என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியாவில் கார் குண்டுவெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்24 May 2017 3:34 AM GMT (Updated: 24 May 2017 3:34 AM GMT)
சிரியாவில் நேற்று கார் குண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டமாஸ்கஸ்:
உள்நாட்டுப்போர் நடந்து வரும் சிரியாவில் ஹாம்ஸ் நகரம், கடந்த 2 தினங்களுக்கு முன் அரசின் முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இந்த நிலையில், அந்த நகரத்தின் புறநகரான அல் ஜஹ்ரா நகரில் நேற்று கார் குண்டு தாக்குதல் நடந்தது.
இந்த தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த கார் குண்டுவெடிப்பு குறித்து அந்த நகர கவர்னர் டலால் அல் பராஜி, சிரிய அரசு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “அல் ஜஹ்ரா நகரத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பு அந்தப் பகுதியை அதிர வைத்தது. அந்த குண்டுவெடிப்பில், 4 பேர் உயிரிழந்தனர். சமீப காலத்தில் ஹாம்ஸ் நகர பகுதியில் சிரிய அரசு படைகள் முன்னேற்றம் கண்டதற்கு பதிலடியாக இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது” என கூறினார்.
இதற்கிடையே டமாஸ்கஸ் நகரத்துக்கு தெற்கே அமைந்துள்ள ஷியா பிரிவினரின் புனிதத்தலம் அருகே வெடிபொருட்கள் நிரப்பி நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த வாகனம் அழிக்கப்பட்டது. இதனால் பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது.
உள்நாட்டுப்போர் நடந்து வரும் சிரியாவில் ஹாம்ஸ் நகரம், கடந்த 2 தினங்களுக்கு முன் அரசின் முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இந்த நிலையில், அந்த நகரத்தின் புறநகரான அல் ஜஹ்ரா நகரில் நேற்று கார் குண்டு தாக்குதல் நடந்தது.
இந்த தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த கார் குண்டுவெடிப்பு குறித்து அந்த நகர கவர்னர் டலால் அல் பராஜி, சிரிய அரசு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “அல் ஜஹ்ரா நகரத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பு அந்தப் பகுதியை அதிர வைத்தது. அந்த குண்டுவெடிப்பில், 4 பேர் உயிரிழந்தனர். சமீப காலத்தில் ஹாம்ஸ் நகர பகுதியில் சிரிய அரசு படைகள் முன்னேற்றம் கண்டதற்கு பதிலடியாக இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது” என கூறினார்.
இதற்கிடையே டமாஸ்கஸ் நகரத்துக்கு தெற்கே அமைந்துள்ள ஷியா பிரிவினரின் புனிதத்தலம் அருகே வெடிபொருட்கள் நிரப்பி நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த வாகனம் அழிக்கப்பட்டது. இதனால் பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X