என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான்: போலீசாரை குறிவைத்து தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் 25 பேர் பலி
Byமாலை மலர்22 May 2017 12:27 AM GMT (Updated: 22 May 2017 12:27 AM GMT)
ஆப்கானிஸ்தானில் சோதனைசாவடிகளில் உள்ள போலீசாரை குறிவைத்து தாலிபான் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 25 போலீசார் பலியாகினர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் சோதனைசாவடிகளில் உள்ள போலீசாரை குறிவைத்து தாலிபான் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 25 போலீசார் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜபூல் மாகாணம் ஷா ஜாய் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளில் நேற்று போலீசார் தங்களது வழக்கமான பணிகளை மேற்கொண்டனர். அப்போது, அங்கு வந்த தாலிபான் தீவிரவாதிகள் போலீசாரை குறிவைத்து கனரக மற்றும் இலகுரக ஆயுதங்களை கொண்டு பயங்கரமாக துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர்.
தாலிபான்களின் இந்த தாக்குதலில் 25 போலீஸார் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு தாலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடி வரும் அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கு இந்த ஆண்டு மற்றொரு சவாலான ஆண்டாக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஏற்கெனவே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் சோதனைசாவடிகளில் உள்ள போலீசாரை குறிவைத்து தாலிபான் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 25 போலீசார் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜபூல் மாகாணம் ஷா ஜாய் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளில் நேற்று போலீசார் தங்களது வழக்கமான பணிகளை மேற்கொண்டனர். அப்போது, அங்கு வந்த தாலிபான் தீவிரவாதிகள் போலீசாரை குறிவைத்து கனரக மற்றும் இலகுரக ஆயுதங்களை கொண்டு பயங்கரமாக துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர்.
தாலிபான்களின் இந்த தாக்குதலில் 25 போலீஸார் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு தாலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடி வரும் அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கு இந்த ஆண்டு மற்றொரு சவாலான ஆண்டாக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஏற்கெனவே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X