என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊழல் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் இருந்து வீசி எறிவேன்: பிலிப்பைன்ஸ் அதிபர் ஆவேசம்
Byமாலை மலர்29 Dec 2016 12:36 PM GMT (Updated: 29 Dec 2016 12:36 PM GMT)
ஊழல் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் இருந்து வீசி எறிவேன் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடெர்டோ தெரிவித்துள்ளார்.
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக கடந்த மே மாதம் ரோட்ரிகோ டியூடெர்டோ பதவியேற்றார். பதவியேற்ற நாளில் இருந்து போதைப்பொருள் ஒழிப்பில் ரோட்ரிகோ தீவிர கவனம் செலுத்தி வருகிறார். போதைப்பொருள் பயன்படுத்துவோர், விற்பனை செய்வோர் என சுமார் 6000 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டில் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஊழல் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் இருந்து வீசி எறிவேன் என ரோட்ரிகோ தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய ரோட்ரிகோ "ஊழல் செய்யும் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று வானில் இருந்து வீசி எறிவேன்" என்றார்.ஏற்கனவே, தான் இதற்கு முன்பு மேயராக பதவி வகித்தபோது மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் ரோட்ரிகோ தெரிவித்தார்.
ரோட்ரிகோவின் போதை ஒழிப்பு செயல்களுக்கு எதிர்க்கட்சிகள், மனித ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் போதைப்பொருள்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் ரோட்ரிகோ தீவிரமாக உள்ளதால் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் ரோட்ரிகோவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக கடந்த மே மாதம் ரோட்ரிகோ டியூடெர்டோ பதவியேற்றார். பதவியேற்ற நாளில் இருந்து போதைப்பொருள் ஒழிப்பில் ரோட்ரிகோ தீவிர கவனம் செலுத்தி வருகிறார். போதைப்பொருள் பயன்படுத்துவோர், விற்பனை செய்வோர் என சுமார் 6000 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டில் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஊழல் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் இருந்து வீசி எறிவேன் என ரோட்ரிகோ தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய ரோட்ரிகோ "ஊழல் செய்யும் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று வானில் இருந்து வீசி எறிவேன்" என்றார்.ஏற்கனவே, தான் இதற்கு முன்பு மேயராக பதவி வகித்தபோது மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் ரோட்ரிகோ தெரிவித்தார்.
ரோட்ரிகோவின் போதை ஒழிப்பு செயல்களுக்கு எதிர்க்கட்சிகள், மனித ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் போதைப்பொருள்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் ரோட்ரிகோ தீவிரமாக உள்ளதால் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் ரோட்ரிகோவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X