என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய தளபதியாக குவாமர் ஜாவேத் பஜ்வா நியமனம்
Byமாலை மலர்26 Nov 2016 3:48 PM GMT (Updated: 26 Nov 2016 3:48 PM GMT)
பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் குவாமர் ஜாவேத் பஜ்வாவை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நியமித்துள்ளார்.
இஸ்லாமபாத்:
பாகிஸ்தான் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பாதி காலத்திற்கும் மேலாக, அதாவது 69 ஆண்டுகள் ராணுவ ஆட்சியே நடைபெற்றுள்ளது. பாகிஸ்தானின் சக்திமிக்க நபர் என்று விவாதிக்கக்கூடிய அளவிற்கு அந்நாட்டின் ராணுவ தளபதி கருதப்படுகிறார். அதனால், ராணுவ தளபதி நியமனம் பாகிஸ்தானில் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் தற்போதைய ராணுவ தளபதி ரகீல் ஷெரீப் பதவிக்காலம் நவம்பர் 29-ம் தேதியுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. இதையடுத்து புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் குவாமர் ஜாவேத் பஜ்வா நியமிக்கப்பட்டுள்ளார். ரகீல் ஷெரீப் செவ்வாய்க்கிழமை முறைப்படி ஓய்வு பெற்றதும், பாஜ்வா ராணுவ தளபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஊழியர் கமிட்டியின் கூட்டுத் தளபதிகளின் தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் சுபேர் ஹயாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமரின் ஆலோசனைப்படி, சுபேர் ஹயாத், குவாமர் ஜாவேத் பஜ்வா ஆகியோரின் பதவி உயர்வுக்கு ஜனாதிபதி மம்னூன் உசைன் ஒப்புதல் அளித்திருப்பதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பஜ்வா தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் பயிற்சி மற்றும் மதிப்பீட்டு பிரிவில் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பதவி வகித்து வருகிறார்.
பாகிஸ்தான் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பாதி காலத்திற்கும் மேலாக, அதாவது 69 ஆண்டுகள் ராணுவ ஆட்சியே நடைபெற்றுள்ளது. பாகிஸ்தானின் சக்திமிக்க நபர் என்று விவாதிக்கக்கூடிய அளவிற்கு அந்நாட்டின் ராணுவ தளபதி கருதப்படுகிறார். அதனால், ராணுவ தளபதி நியமனம் பாகிஸ்தானில் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் தற்போதைய ராணுவ தளபதி ரகீல் ஷெரீப் பதவிக்காலம் நவம்பர் 29-ம் தேதியுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. இதையடுத்து புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் குவாமர் ஜாவேத் பஜ்வா நியமிக்கப்பட்டுள்ளார். ரகீல் ஷெரீப் செவ்வாய்க்கிழமை முறைப்படி ஓய்வு பெற்றதும், பாஜ்வா ராணுவ தளபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஊழியர் கமிட்டியின் கூட்டுத் தளபதிகளின் தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் சுபேர் ஹயாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமரின் ஆலோசனைப்படி, சுபேர் ஹயாத், குவாமர் ஜாவேத் பஜ்வா ஆகியோரின் பதவி உயர்வுக்கு ஜனாதிபதி மம்னூன் உசைன் ஒப்புதல் அளித்திருப்பதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பஜ்வா தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் பயிற்சி மற்றும் மதிப்பீட்டு பிரிவில் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பதவி வகித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X