என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் மூடுபனியால் கார்கள் மோதல்: 25 பேர் பலி - 100 பேர் காயம்
Byமாலை மலர்4 Nov 2016 6:24 AM GMT (Updated: 4 Nov 2016 6:25 AM GMT)
பாகிஸ்தானில் ஏற்பட்ட மூடுபனியால் கார்கள் மோதிக்கொண்டதில் 25 பேர் பலியாகினர். 100 பேர் காயம் அடைந்தனர்.
லாகூர்:
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் லாகூர் நெடுஞ்சாலை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். இந்த நிலையில் நேற்று அதிகாலை பஞ்சாப் மாகாணம் ஹாஷாபாத் என்ற இடத்தில் மூடுபனி கடுமையாக இருந்தது. இதனால் ரோட்டில் சென்ற வாகனங்களுக்கு வழிதெரியவில்லை. முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன.
இருந்தும் வழி தெரியாமல் ரோட்டில் சென்ற 12 கார்கள் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதிக் கொண்டன. இதற்கிடையே அந்த வழியாக சென்ற பஸ்சும் விபத்துக்குள்ளானது.
இதில் 13 பேர் பலியாகினர். 50 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் யாத்ரீகர்கள் ஆவர். லாகூர் அருகேயுள்ள ரெய்வின்ட் என்ற இடத்தில் தாப்லீகி ஜமாத் என்ற இடத்தில் உள்ள வழிபாட்ட தலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியவர்கள்.
இவை தவிர ராவல் பண்டி- இஸ்லாமாபாத் இடையே சுகேசி என்ற இடத்தில் கார்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயம் அடைந்தனர். இதுவும் கடும் பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று பைசலா பாத்தில் 2 கார்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். 5 பேர் காயம் அடைந்தனர் நேற்று நடந்த இந்த 3 விபத்துக்களில் 25 பேர் பலியாகினர். 100 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் லாகூர் நெடுஞ்சாலை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். இந்த நிலையில் நேற்று அதிகாலை பஞ்சாப் மாகாணம் ஹாஷாபாத் என்ற இடத்தில் மூடுபனி கடுமையாக இருந்தது. இதனால் ரோட்டில் சென்ற வாகனங்களுக்கு வழிதெரியவில்லை. முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன.
இருந்தும் வழி தெரியாமல் ரோட்டில் சென்ற 12 கார்கள் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதிக் கொண்டன. இதற்கிடையே அந்த வழியாக சென்ற பஸ்சும் விபத்துக்குள்ளானது.
இதில் 13 பேர் பலியாகினர். 50 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் யாத்ரீகர்கள் ஆவர். லாகூர் அருகேயுள்ள ரெய்வின்ட் என்ற இடத்தில் தாப்லீகி ஜமாத் என்ற இடத்தில் உள்ள வழிபாட்ட தலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியவர்கள்.
இவை தவிர ராவல் பண்டி- இஸ்லாமாபாத் இடையே சுகேசி என்ற இடத்தில் கார்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயம் அடைந்தனர். இதுவும் கடும் பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று பைசலா பாத்தில் 2 கார்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். 5 பேர் காயம் அடைந்தனர் நேற்று நடந்த இந்த 3 விபத்துக்களில் 25 பேர் பலியாகினர். 100 பேர் காயம் அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X