என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனித உரிமையை மேம்படுத்துங்கள்: இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தல்
Byமாலை மலர்1 Nov 2016 8:08 PM GMT (Updated: 1 Nov 2016 8:08 PM GMT)
இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற குழு வலியுறுத்தி உள்ளது.
கொழும்பு:
இலங்கையில் 2009-ம் ஆண்டு போருக்கு பின்னர் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்ந்து முகாம்களிலேயே வைக்கப்பட்டுள்ளனர். போலீ்ஸ் வன்முறை, சித்திரவதை, சிறார் தொழிலாளர் சட்ட விதி மீறல் என சகல விதமான மீறல்களும் இலங்கையில் தங்கு தடையின்றி நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே, மனித உரிமை மீறல்களில் தொடர்ந்து இலங்கை ஈடுபட்டு வந்ததால் ஐரோப்பிய யூனியனின் சிறப்பு வர்த்தக உரிமைச் சலுகையை இலங்கையிடம் இருந்து ஐரோப்பிய யூனியன் பரித்துக் கொண்டது.
இந்நிலையில், இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற குழு வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தின் தலைவர் ஜான் லம்பெர்ட் கூறுகையில், “மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தால் மட்டும் தான் இலங்கை தனக்கு தேவையான சிறப்பு வர்த்த சலுகைகளை ஐரோப்பிய யூனியனிடம் இருந்து மீண்டும் பெற முடியும். கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.
இலங்கையில் 2009-ம் ஆண்டு போருக்கு பின்னர் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்ந்து முகாம்களிலேயே வைக்கப்பட்டுள்ளனர். போலீ்ஸ் வன்முறை, சித்திரவதை, சிறார் தொழிலாளர் சட்ட விதி மீறல் என சகல விதமான மீறல்களும் இலங்கையில் தங்கு தடையின்றி நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே, மனித உரிமை மீறல்களில் தொடர்ந்து இலங்கை ஈடுபட்டு வந்ததால் ஐரோப்பிய யூனியனின் சிறப்பு வர்த்தக உரிமைச் சலுகையை இலங்கையிடம் இருந்து ஐரோப்பிய யூனியன் பரித்துக் கொண்டது.
இந்நிலையில், இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற குழு வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தின் தலைவர் ஜான் லம்பெர்ட் கூறுகையில், “மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தால் மட்டும் தான் இலங்கை தனக்கு தேவையான சிறப்பு வர்த்த சலுகைகளை ஐரோப்பிய யூனியனிடம் இருந்து மீண்டும் பெற முடியும். கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X