என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாய்லாந்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும்: ராணுவ ஆட்சியாளர் அறிவிப்பு
Byமாலை மலர்9 Aug 2016 6:24 PM GMT (Updated: 9 Aug 2016 6:24 PM GMT)
தாய்லாந்தில் அடுத்த ஆண்டு திட்டமிட்டபடி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று ராணுவ ஆட்சியாளரும் பிரதமருமான பிரயூத் சான் ஓ ஷா தெரிவித்தார்.
பாங்காங்:
தாய்லாந்தில் 1938-ம் ஆண்டு மன்னர் ஆட்சி முடிவுக்கு பின் ஜனநாயக முறையில் பொறுப்பேற்ற அனைத்து ஆட்சியிலும் ஊழல் தலைவிரித்தாடியது. இதற்காக 19 முறை அரசியல் அமைப்பு மாற்றி அமைக்கப்பட்ட போதிலும் அவை மக்களுக்கு பயன் அளிக்காத நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில், மீண்டும் தாய்லாந்தில் ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கொண்டுவரும் வகையில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளுடன் புதிய அரசியல் அமைப்பை ராணுவ ஆட்சிக்குழு உருவாக்கி உள்ளது. இந்த அரசியல் அமைப்பு பற்றிய மக்களின் கருத்தை அறியும் வகையில் நேற்று முன் தினம் நாடு முழுவதும் பொதுவாக்கெடுப்பு நடந்தது. இதில் 5 கோடி வாக்காளர்கள் கலந்து கொண்டனர்.
வாக்கெடுப்பில், அங்கு தேர்தல் நடத்த ஆதரவாக மக்கள் வாக்களித்தையடுத்து அடுத்த ஆண்டு திட்டமிட்டபடி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று ராணுவ ஆட்சியாளரும் பிரதமருமான பிரயூத் சான் ஓ ஷா தெரிவித்தார். மேலும், அவர் பொதுவாக்கெடுப்பு குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. ஆனால், தேர்தல் நடைமுறைகள் வரும் 2017 ஆம் ஆண்டு நடைபெறும் என்று மட்டும் தெரிவித்தார்.
தாய்லாந்தில் 1938-ம் ஆண்டு மன்னர் ஆட்சி முடிவுக்கு பின் ஜனநாயக முறையில் பொறுப்பேற்ற அனைத்து ஆட்சியிலும் ஊழல் தலைவிரித்தாடியது. இதற்காக 19 முறை அரசியல் அமைப்பு மாற்றி அமைக்கப்பட்ட போதிலும் அவை மக்களுக்கு பயன் அளிக்காத நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில், மீண்டும் தாய்லாந்தில் ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கொண்டுவரும் வகையில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளுடன் புதிய அரசியல் அமைப்பை ராணுவ ஆட்சிக்குழு உருவாக்கி உள்ளது. இந்த அரசியல் அமைப்பு பற்றிய மக்களின் கருத்தை அறியும் வகையில் நேற்று முன் தினம் நாடு முழுவதும் பொதுவாக்கெடுப்பு நடந்தது. இதில் 5 கோடி வாக்காளர்கள் கலந்து கொண்டனர்.
வாக்கெடுப்பில், அங்கு தேர்தல் நடத்த ஆதரவாக மக்கள் வாக்களித்தையடுத்து அடுத்த ஆண்டு திட்டமிட்டபடி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று ராணுவ ஆட்சியாளரும் பிரதமருமான பிரயூத் சான் ஓ ஷா தெரிவித்தார். மேலும், அவர் பொதுவாக்கெடுப்பு குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. ஆனால், தேர்தல் நடைமுறைகள் வரும் 2017 ஆம் ஆண்டு நடைபெறும் என்று மட்டும் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X