என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 80 வயது மூதாட்டி வீராயி, வயது மூப்பு காரணமாக நள்ளிரவு தூக்கத்திலேயே உயிரிழந்தார்.
- மறுநாள் வீராயியின் கணவர் முத்து அம்பலமும் (85) தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மதுரை மாவட்டம் கருப்பாயூரணியில் 80 வயது மூதாட்டி வீராயி, வயது மூப்பு காரணமாக பிப்ரவரி 8 நள்ளிரவு உடல்நலக்குறைவால் தூக்கத்திலேயே உயிரிழந்தார்;
இந்நிலையில் இவருடைய கணவரான 85 வயதுடைய முத்து அம்பலம் மனைவியின் பிரிவு தாங்காது தவித்த நிலையில், நேற்று இரவு தூக்கத்திலேயே உயிரிழந்தார்.
67 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்த தம்பதி இறப்பிலும் இணைபிரியாது அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
- திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.
- விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை கட்டணம்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் பஸ் மற்றும் ரெயில்களிலும் வந்து குவிந்து வருவதால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.
இந்நிலையில், தைப்பூசத்தையொட்டி நாளை பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்றும், நாளை காலை 10 மணி முதல் ஆவணப் பதிவு முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
பொது விடுமுறை நாளான தைப்பூசம் நாளில் ஆவணப் பதிவுகளை மேற்கொள்ள பொது மக்கள் விரும்புவதாக தமிழக அரசு அனுமதித்துள்ளது.
விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை கட்டணம் சேர்த்து வசூலிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
- தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்.
- விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை தயாரித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. இதைத்தொடர்ந்து 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் துக்லக் தர்பார், மகான், காத்துவாக்குல ரெண்டு காதல், கோப்ரா, லியோ போன்ற தொடர் வெற்றித்திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர்.
தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை தயாரித்துள்ளது. இதைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான பூஜை விழா இன்று நடைப்பெற்றது.

இந்த பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக வெற்றிமாறன், ஜெகதீஷ் கலந்துக் கொண்டனர். இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சுரேஷ் இயக்கவுள்ளார்.

படத்தின் இசையை ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் மேற்கொள்ளவுள்ளார்.பிலோமின்ராஜ் படத்தொகுப்பை செய்கிறார். படத்தை பற்றிய மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு
- பேருந்தில் சீட்டு பிடிப்பதற்கு கர்ச்சீப் அல்லது பையை போடுவது வழக்கம்.
- பேருந்து இருக்கையில் அரிவாள் இருந்ததை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி - கோபாலபுரம் இடையேயான அரசு பேருந்தில் 2 சீட்களில் இடம்பிடிப்பதற்காக 2 அரிவாள்களை வைத்த நபர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்தில் சீட்டு பிடிப்பதற்கு கர்ச்சீப் அல்லது பையை போடுவது வழக்கம். ஆனால் இருக்கையில் கர்ச்சீப்புக்கு பதில் அரிவாள் இருந்ததை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
5C தடம் எண் கொண்ட பேருந்தில் அரிவாள்கள் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து பொள்ளாச்சி தாலுகா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு செப்டம்பர் 15ம் தேதி நடைபெற்றது.
- குரூப் 2 மற்றும் குரூப்-2ஏ பதவியில் 2006 பதவிக்கான மெயின் தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த 8ம் தேதி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள ஆயிரத்து 540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 20 தேதி வெளியிட்டது.
இந்த குரூப் 2 பணியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் என 534 பணியிடங்கள் அடங்கும்.
அதேபோல் குரூப் 2ஏ பணியில் கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், 273 காவல் உதவியாளர், மருத்துவம் மற்றும் ஊரக நல சேவைகள் உதவியாளர், போக்குவரத்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து உதவியாளர், தொழிலாளர் உதவியாளர் என 48 துறைகளில் 2006 பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 15ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 5 லட்சத்து 81ஆயிரத்து 305 பேர் எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட் கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் குரூப் 2 மற்றும் குரூப்-2ஏ பதவியில் 2006 பதவிக்கான மெயின் தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த 8ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், குரூப் 2ஏ வினாத்தாளில் 88வது கேள்வியில் "தமிழ்நாட்டில், இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக, முதலமைச்சரை, மக்கள் "தாயுமானவர்" என்று அழைக்கின்றனர் என கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு விடையாக 5 ஆப்ஷன்கள் இடம்பெற்றது. அ) பள்ளியில் காலை உணவு, ஆ) விடியல் பயணத் திட்டம், இ) நீங்கள் நலமா ஈ)மக்களுடன் முதல்வர் உ) விடை தெரியவில்லை.
இதில் தேர்வர்கள் சரியான பதிலை தேர்வு செய்து நிரப்ப வேண்டும். தற்போது இந்த கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், குரூப் 2 தேர்வில் முதல்வர் கொண்டு வந்த திட்டம் குறித்த கேள்வியை விமர்சித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்," TNPSC இல்லை, DMKPSC" என்று குறிப்பிட்டுள்ளார்.
- காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.
- காங்கிரஸ் தலைவர்கள், எம.எல்.ஏ-க்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறுவதாக பதிலடி.
டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 22 இடங்களை பிடித்து தோல்வியைத் தழுவியது. கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்த கட்சியின் 30 எம்.எல்.ஏ.-க்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா தெரிவித்திருந்தார்.
இதற்கு பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரும், ஆம் ஆத்மி எம்.பி.யுமான மல்விந்தர் சிங் கங் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக மல்விந்தர் சிங் கங் கூறியதாவது:-
அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களும் உங்களுடன் தொடர்பில் உள்ளனரா?. அவர்கள் இருந்தால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அபோஹர் எம.எல்.ஏ. சந்தீப் ஜகார் எங்கே? ராஜ்குமார் சபேவால் (தற்போது ஆம் ஆத்மி கட்சியில் உள்ளார். கடந்த வருடம் காங்கிரஸ் கட்சியில் இருந்த வெளியேறினார்) கட்சியில் இருந்து ஏன் வெளியேறினார்?.
பிரதாப் சிங் பஜ்வாலின் சொந்த சகோதரர் பெடாஜங் பஜ்வா பாஜகவில் இணைந்தார். அதைக்கூட அவரால் தடுக்கமுடியவில்லை. இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர்கள், எம.எல்.ஏ-க்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் குறித்து பாஜ்வா கவலைப்படுவதாகத் தெரிகிறது.
இவ்வாறு மல்விந்தர் சிங் கங் தெரிவித்துள்ளார்.
- அஜித் நடித்த துணிவு திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் தர்ஷன் நடித்து இருந்தார்.
- தர்ஷன் அடுத்து கதாநாயகனாக திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கனா திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் பெற்றது. இப்படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார் நடிகர் தர்ஷன். இப்படத்தின் மூலம் மக்களுக்கு பரீட்சையமானவரானார்.
இப்படத்தை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. அஜித் நடித்த துணிவு திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
தற்பொழுது தர்ஷன் அடுத்து கதாநாயகனாக திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராஜவேல் இயக்கியுள்ளார். இப்படத்தை ப்ளேஸ்மித் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஒரு சை ஃபை திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு
- குழந்தையின் தாத்தா அருகில் இருந்த கடைக்கு சென்ற போது இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.
சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை அருகே ஸ்டார்ட் செய்து வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் ஆக்ஸிலேட்டரை, தெரியாமல் திருகிய 4 வயது குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை வாகனத்தில் நிற்கவைத்துவிட்டு, குழந்தையின் தாத்தா அருகில் இருந்த கடைக்கு சென்ற போது இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது
இந்த விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பேருந்து ஒன்று நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- விபத்து குறித்து குவாத்தமாலா ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிப்பு.
மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலா என்கிற நாட்டின் புறநகர்ப் பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர்.
குவாத்தமாலா நகரில் பேருந்து ஒன்று நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், 30 பேர் உயிரிழந்தனர். மேலும், உயிர் பிழைத்தவர்கள் பலர் பேருந்தில் சிக்கிக்கொண்டதாக தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்து குறித்து குவாத்தமாலா ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்து, மீட்பு முயற்சிகளுக்கு உதவ நாட்டின் ராணுவம் மற்றும் பேரிடர் நிறுவனத்தை நியமித்தார்.
மேலும், "இதயத்தை உடைக்கும் செய்திகளைக் கேட்டு விழித்தெழுந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் இருக்கிறோம். அவர்களின் வலி எனது வலி," என்று அரேவலோ குறிப்பிட்டிருந்தார்.
- ஜீவா (19), தனக்கு பைக் வாங்கிக்கொடுக்கும்படி தந்தையிடம் தொடர்ந்து கேட்டு அடம்பிடித்து வந்துள்ளார்.
- தநதையை மிரட்டுவதாக நினைத்து பிப்ரவரி 8ம் தேதி ஜீவா தன்மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டுள்ளார்
சென்னை மாவட்டம் நெற்குன்றத்தை சேர்ந்த ஜீவா (19), தனக்கு பைக் வாங்கிக்கொடுக்கும்படி தந்தையிடம் தொடர்ந்து கேட்டு அடம்பிடித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஜேவா அவரது தந்தை முருகன் வேலை செய்யும் இடத்திற்கு சென்று அவரை மிரட்டுவதாக நினைத்து பிப்ரவரி 8ம் தேதி ஜீவா தன்மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டுள்ளார்
அப்போது அங்கே குளிர்காய மூட்டப்பட்டிருந்த தீ ஜீவா மீது பற்றியதால் அப்பாவின் கண்முன்னே ஜீவா தீப்பிடித்து அலறியுள்ளார்.
விபத்திற்கு பிறகு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜீவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
- இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள அண்ணன் சந்திரகுமார் அவர்களை இன்று நேரில் வாழ்த்தினோம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரகுமார், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தை பெரியார் சிலையை வழங்கி வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள அண்ணன் சந்திரகுமார் அவர்களை இன்று நேரில் வாழ்த்தினோம்.
பெரியார் மண்ணில் கழகம் பெற்ற பெருவெற்றியை குறிக்கும் வகையில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவச்சிலையை அண்ணன் சந்திரகுமார் அவர்கள் நமக்கு பரிசளித்தார்கள். அவரது பணிகள் சிறக்கட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
- . இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'லவ் ஸ்டோரி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார். அவருக்கும், சாய் பல்லவிக்குமான காதல் மற்றும் அதைச்சுற்றிய பல்வேறு விஷயங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது.
இந்நிலையில் திரைப்படத்தின்3 நாள் வசூலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் இதுவரை 62.37 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் திரைப்படம் கூடுதல் வசூலைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு






