
சென்னை:
தமிழக அரசு போக்கு வரத்து துறை சார்பில் போக்குவரத்து கழக அலுவலகங்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவர்களின் மனைவி, கணவர், உதவியாளர் ஒருவருடனோ, போக்குவரத்து கழக பேருந்துகளில் (ஏசி பேருந்து) உள்பட இலவச பயணம் மேற்கொள்ளவும், உரிய இருக்கை வழங்கிடவும் போக்குவரத்துதுறை நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவர்களின் மனைவி, கணவர், உதவியாளர் ஒருவருடன் இலவச பயணம் மேற் கொள்ள பேருந்துகளில் அனுமதிப்பதில்லை எனவும், உரிய இருக்கை வழங்கப்படுவதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
இலவச பயணம் மேற்கொள்ளவும், இருக்கை வழங்கிடவும் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. புகார் பெறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... மொழிப்போர் தியாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை