
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 1-ந் தேதி 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை அறிவித்தார். தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு, பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தான் நாட்டில் உள்ள மாநில கவர்னர்களில் இளம்வயது கவர்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு அடுத்த இடத்தில் குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் (60) உள்ளார். முதல் முறை கவர்னர்கள் 19 பேர், 9 பேர் பெண்கள். ஆந்திர மாநில கவர்னர் விஸ்வபூஷண் ஹரிசந்தன் தான் அதிக வயதானவர். அவருக்கு வயது 85.