

இக்கூட்டத்திற்கு பின்னர் கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம். தமிழகத்தின் மரபணுவை மாற்ற துடிக்கும் எந்த கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளனர்.
40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு மகேந்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரச்னைகளை முன்வைத்து தேர்தலின்போது பிரச்சாரம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam