என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எழும்பூர்-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
- திருவனந்தபுரத்தில் இருந்து இன்று மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், நாளை காலை 11.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வாரவிடுமுறையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சில சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* நாகர்கோவிலில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06011), மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
* திருவனந்தபுரத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06108), நாளை காலை 11.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மதியம் 1.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06107), மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






